Menaka Mookandi / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளையொட்டி இன்று கிண்ணியாவில் இரத்ததானம் நிகழ்வொன்று கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
கிண்ணியா தள வைத்திய சாலை இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எப் ராஜியா தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் 18 வயது தொடக்கம் 60 வயது வரை சுகதேசிகளான ஆண்கள், பெண்கள் உட்பட பலர் இரத்ததானங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .