Janu / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம், சுமார் 35,000 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது. நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினூடாக பயணிக்கும் இந்த யாத்திரை, எதிர்வரும் அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நிறைவடையவுள்ளது.
இந்த யாத்திரை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சின்மயா மிஷன் பொறுப்பாளர் சுவாமி மித்ரானந்தா, கொழும்பு சின்மயா மிஷன் பொறுப்பாளர் சுவாமி குணாதித்தானந்தா மற்றும் சுவாமி அனுகூலானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுவாமிகள், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டனர்:
இந்த யாத்திரையில் சேவைப்பணிகளுக்காக மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு வாகனத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை (35,000 கி.மீ) பெண்களே முழுமையாகச் செலுத்தி வருகின்றனர். பெண்களின் வலிமையையும் சக்தியையும் உலகுக்கு வெளிக்காட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த முயற்சி அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago