Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், அரச நிறுவனங்களில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள், நேற்று (24) முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். அஜீத் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிண்ணியா தளவைத்தியசாலை, பிரதேச செயலகம், பொது நூலகம், பொலிஸ் நிலையம், சிறுவர் பூங்கா, பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் கிருமி தொற்று ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், தொடர்ந்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
9 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago