2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரிஷாட்டுக்கு கைது ஆணை: ‘முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடு’

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தற்போதைய அரசாங்கமானது, சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு ஆதரவை தரவில்லை என்ற காரணத்தால், தற்போதைய ஆட்சியாளர்கள் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனரென்றார்.

இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீனை கைது செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளமையானது, முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளதெனவும், நஸீர் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .