Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான பிரதிநிதி நீல் பூனே , மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 3 நாள் விஜயம் மேற்கொண்டு கிழக்கு மாகணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
திருகோணமலை வருகை தரும் இவர்கள் மதியம் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா ஆகியோரை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து நிலமைகளைக் கேட்டறியவுள்ளனர்.
15ஆம் திகதி காலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெயரந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள கிளிவெட்டி நலன்புரி நிலையத்திற்கு சென்று மூதூர் கிழக்கு பகுதியில் இருந்து வெளியேறிய மக்ளது பிரச்சனைகளை கேட்டறிவர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லும் இவர்கள் 16ஆம் திகது மட்டக்ளப்பு அரசாங்க அதிபரையும், பிரதேச இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களையும் சந்திக்க உள்ளனர்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago