Kogilavani / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
கொத்மலை, இறம்பொடை பகுதியில் வானொன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து- கம்பளை நோக்கி பயணித்த வானொன்றே ஞாயிற்றுக்கிழமை இரவு(15) பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெலிசர பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர். இவர்களில், காயமடைந்த பெண்; மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








21 minute ago
34 minute ago
37 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
37 minute ago
51 minute ago