Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் இடம்பெற்றுவரும் ஐந்தாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தமது முதலாவது இனிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 86 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியுள்ளது.
தற்போது களத்தில், கருண் நாயர் 71 ஓட்டங்களுடனும், முரளி விஜய் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, லோகேஷ் ராகுல் 199 ஓட்டங்களுடனும் பார்த்திவ் பட்டேல் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக, ஸ்டுவேர்ட் ப்ரோட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், மொயின் அலி 146, ஜோ ரூட் 88, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட லியாம் டோஸன் ஆட்டமிழக்காமல் 66, அடில் ரஷீட் 60, ஜொனி பெயார்ஸ்டோ ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, இரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago