2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்தியாவுக்கு எதிராக போராடுகிறது இங்கிலாந்து

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்குமிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

விக்கெட் இழப்பின்றி 111 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி ஃபொலோ ஒன் முறையில் ஆடிவரும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் 10 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய நாள் ஆட்டம் ஆரம்பித்து சில நேரங்களிலேயே முதலாவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய போதிலும், அணித்தலைவர் அலஸ்ரெயர் குக் உம், விக்கெட் காப்பாளர் மற் பிரயரும் பிரிக்கப்படாத 141 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியின் போராட்டத்தை உறுதி செய்தனர்.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலஸ்ரெயர் குக் ஆட்டமிழக்காமல் 168 ஓட்டங்களையும், மற் பிரயர் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், நிக் கொம்ப்டன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ், பிரக்ஜான் ஓஜா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷகீர் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 521 ஓட்டங்களையும், பதிலளித்தாடி இங்கிலாந்து அணி தனது முதலாவது இனிங்ஸில் 191 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .