A.P.Mathan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் இளம் சகலதுறை வீரர் ஜேம்ஸ் போல்க்னர், இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் உடல் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். 
24 பந்துகளில் அரைச் சதத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், அன்றைய போட்டியில் தான் வீசிய முதலாவது பந்துவீச்சிலேயே ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியிருந்தார் போல்க்னர். ஆயினும், தனது மூன்றாவது ஓவரை அவர் வீசிக்கொண்டிருந்தபோது உடல் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தைவிட்டு வெளியேறியிருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, அவரது காயமானது சற்று மோசமானதாகவே இருப்பதாகத் தெரியவருகிறது.
சகவீரர் மக்ஸ்வெல் கருத்துத் தெரிவிக்கையில், ''போல்க்னர் அணிக்கு முக்கியமான ஒரு வீரர். போட்டியை முடித்து வைப்பதில் சிறந்தவர். அவரது இழப்பு எமக்கு உலகக் கிண்ணத் தொடரில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடல் உபாதை காரணமாக போல்க்னர், உலகக் கிண்ணத்தொடரில் விளையாடமுடியாமல்போகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஹென்ரிக்ஸ் அல்லது ஷோன் மார்ஷ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago