2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 10:53 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராகவும் பின்னர் அணியின் வழிகாட்டுநராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 1

  • ASHRAF Monday, 11 September 2017 07:12 AM

    good decision

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .