Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ்வரி விஜயனந்தன்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பிரதான கட்சிகள் 4, சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி (சமஹி ஜனபலவேகய) கூட்டமைப்பானது, இன்று (2) காலை கொழும்பு- தாமரைத் தடாக அரங்கில் உதயமானது.
இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்டணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் சார்பில் வெடபிமே அபி அமைப்பு உள்ளடங்கலாக 18 தொழிற்சங்கங்கள், 20 சிவில் அமைப்புகள் இந்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்த்துள்ளன.
குறித்த தரப்பினருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
16 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
30 minute ago