Editorial / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காகத் தகுதிபெற்ற முதலாவது ஐரோப்பிய அணியாக, பெல்ஜியம் அணி மாறியுள்ளது. கிரேக்க அணிக்கெதிராகப் பெற்ற 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியே, அவ்வணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது.
முதற்பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில், 2ஆவது பாதியில் பெல்ஜியம் அணி தனது முதலாவது கோலைப் பெற, கிரேக்க அணி பதிலடி வழங்கியது. ஆனால் 74ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தில் றொமேலு லூக்காகு, தனது அணிக்காகக் கோலொன்றைப் பெற்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன் மூலம், உலகக்கிண்ண தகுதியும் உறுதியானது.
அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கு, தொடரை நடத்தும் ரஷ்யாவுடன், பிரேஸில், ஜப்பான், ஈரான், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள், ஏற்கெனவே தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026