Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 மே 19 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரினதும் விளக்கமறியல், ஜூன் மாதம் 2ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டம் ஒன்று, காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) மாலை இடம் பெறவிருந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.
இங்கு இடம் பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கத்திகுத்து மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரண்டு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில், இன்று (19) ஆஜர்படுத்திய போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
9 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago