Niroshini / 2016 மார்ச் 30 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் பிணை வழங்குமாறு இன்று (30) கோரப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் பிணை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி, ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தை எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மும்தாஜ் ஆகிய இருவருக்கும் இன்று புதன்கிழமை பிணை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை முதலாம் சந்தேக நபரான மஜீத் மௌவியின் மனைவியான சிறுமியின் வளர்ப்புத்தாய் மும்தாஜ் சார்பில் சட்டத்தரணி அமீன் மற்றும் இரண்டாம் சந்தேக நபரான சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் ரப்பாணி சார்பில் சட்டத்தரணி ஆர்.கண்ணன் ஆகிய இருவரும் இந்த பிணை மனுவை தாக்கல் செய்தனர்.
இவ்விருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என சட்டத்தரணி மொஹமட் றிஸ்வி வாதிட்டார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இவ்விரு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கமுடியாது என தெரிவித்து பிணை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
காத்தான்குடி அப்தல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கடந்த 13.3.2016 அன்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் (14.3.2016) திங்கட்கிழமை ஆஜர்படுத்தினர்.
இதன்போது இவர்களிருவரையும் 28.3.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கணேசராஜா உத்தரவிட்டிருந்தார்.
இதன் படி மீண்டும் திங்கட்கிழமை(28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களுக்கான விளக்கமறியல் 11.4.2016 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago