2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

வைரலாகும் ரிகானாவின் புதிய புகைப்படங்கள்

Editorial   / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சர்வதேசப் பாடகியும் தொழிலதிபருமான ரிகானா, தனது உள்ளாடை பிராண்டின் கோடைகால சேகரிப்புக்காக வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

தான் சொந்தமாக நடத்தி வரும் ‘சாவேஜ் எக்ஸ் ஃபென்டி’ (Savage X Fenty) பிராண்டின் சிவப்பு நிறப் பூக்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை அணிந்து ரிகானா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வியாழக்கிழமை அன்று பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களைக் கண்ட அவரது ரசிகர்கள், “ரிகானா முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அழகாக இருக்கிறார்” என்றும், “இவ்வளவு கவர்ச்சியாக இருப்பதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் வியப்புடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல பாடகி அரியானா கிராண்டே இந்தப் புகைப்படங்களுக்குத் தனது விருப்பத்தைத் (Like) தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்டினா மிலியன் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரிகானாவின் இந்த அதிரடித் தோற்றத்தைக் கண்டு ஆச்சரியத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டு ரிகானாவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அனைத்து உடல் அமைப்பு கொண்டவர்களுக்கும் ஏற்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றது. 2023-இல் இதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து ரிகானா விலகினாலும், இப்போதும் அவர் இதன் இணை உரிமையாளராகவும் நிர்வாகத் தலைவராகவும் நீடிக்கிறார். இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 1 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரிகானாவின் வாழ்க்கைத்துணையும் பிரபல ராப் பாடகருமான ஏசாப் ராக்ஸி, ரிகானா குறித்து அண்மையில் சில நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

“தாயான பிறகு ரிகானாவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாய்மை ஒருவரை நிச்சயமாக மாற்றும்; ஆனால், இந்த பெண் எப்போதுமே ஒரு மாயாஜாலமானவள்” என்று அவர் ‘டபிள்யூ’ (W Magazine) இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஆர்.இசட்.ஏ (RZA), ரையட் (Riot) மற்றும் கடந்த செப்டம்பரில் பிறந்த ராக்கி (Rocki) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .