Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகருக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள 'சுற்றுலா தகவல் நிலையம்' எதிர்வரும் சனிக்கிழமை (29) திறந்து வைக்கப்படுமென்;று மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இந்த திறப்பு விழா பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு, மாநகர மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சுற்றுலா கேந்திர நிலையங்கள், அணுகும் வசதிகள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் விபரங்கள், வாகன வசதிகள் அடங்கிய விபரங்கள் இந்த நிலையத்தினால் அச்சிடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
ஆசிய பவுண்டேஷினின் 2.9 மில்லியன் ரூபாய், மட்டக்களப்பு மாநகரசபையின் 1.8 மில்லியன் ரூபாய் மற்றும் ஏடு நிறுவனத்தின் 0.5 மில்லியன் ரூபாய் நிதியுதவிகளில் இந்த சுற்றுலா தகவல் நிலையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறிருக்க, உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் பாரம்பரிய உணவு வகைகளின் அறிமுக விழா மற்றும் மட்டக்களப்பின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் கலை, கலாசார நிகழ்வு காந்தி பூங்காவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ளது.
3 minute ago
14 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
16 minute ago
1 hours ago