Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு செவிப்புலனற்ற ஐந்து பேருக்கு நியமனங்களை வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அகமட் மாநகர ஆணையாளருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு தினமும் உலக செவிப்புலனற்றோர் தினமும் நேற்று சனிக்கிழமை திருமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போசகர் கே.பிரதீபன்(சனா) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் கே.அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போதே, செவிப்புலன் வலுவற்றோரின் நலன் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அகமட் மாநகர ஆணையாளருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
32 minute ago
41 minute ago