Suganthini Ratnam / 2016 ஜூலை 08 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் சைக்கிளும் நேற்று வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சைக்கிளை செலுத்திச் சென்ற ஆரையம்பதிப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.மோகனசுந்தரம் (வயது 45) என்பவரே படுகாயமடைந்த நிலையில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சைக்கிளுடன்; மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago