Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான், றிபாயா நூர்)
கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியில் 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சங்கர் என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியான இவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அருகிலுள்ள ஆலய உற்சவத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கியதாகவும் காலை 6 மணியளவில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படும் நேரத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளை இருக்கவில்லை எனவும் அவர்கள் ஆலயத்திற்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தினர். அத்துடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வி.ராமகமலன் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (படங்கள் :- ரி.எல்.ஜௌபர்கான், றிபாயா நூர்)

6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025