Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பன்சேனைக் கிராமத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், யானை தாக்கியதில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பில் கடந்த வருடமும் இவ்வருடத்தில் முதல் 3 மாதங்களிலும் யானை தாக்குதலுக்கு இலக்காகி 15 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் யானை தாக்குதலில் 108 வீடுகள் முற்றாகவும் 55 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள அதேவேளை, பல ஏக்கர் தென்னை மரங்களும் பயன்தரு மரங்களும் யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
44 minute ago