Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் முத்தமிழ் விழாவும் தேனகம் சஞ்சிகை வெளியீடும் நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்ற (சிவில்) நீதிபதி பாலேந்திரா சசி மகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொள்வுள்ளனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட நிதி பணிப்பாளர் அருட் தந்தை பேராசிரியர் தர்மராஜா ஸ்ரீதரன் சில்வஸ்ரர் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் யு.வெலிகல ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
53 minute ago