2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கிராமப் புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், கொரோனா வைரஸ் தொற்று; தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

இந்த விழிப்பூட்டல் நடவடிக்கை, நேற்று (19) ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற கிராமங்களில் இடம்பெற்றது.

இதன் ஓர் அங்கமாக, கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் சமுக சேவையாளர்களுக்கும், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மரண வீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும்  மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸாரினதும் சுகாதாரப் பிரிவினரதும் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள் செயற்படவேண்டியது அவசியம் எனவும் அறிவுரை வழங்கப்படுகின்றது.

விழிப்பூட்டலில்  பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X