2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிருமி தொற்று நீக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி 

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் கூடும் பொதுவிடங்களில், கிருமி தொற்று நீக்கும் பணிகள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் பொதுமக்கள் கூடிய நிரந்தர சந்தைகள், தற்காலிக சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்நிர வளாகங்கள் ஆகிய இடங்களில்,  மாநகர சுகாதாரப் பிரிவினர், தொற்று நீக்கும் பணிகளை, இன்று(7) முன்னெடுத்தனர்.

மேற்படித் தொற்று நீக்கும் பணிகள், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன், தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .