2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு பொருள்கள் விநியோகம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கும் கிழக்கு மாகாண கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமை புரியும் வைத்தியதிகாரிகள், தாதியர்கள், ஊழியர்களின் பாவனைக்காக அத்தியாவசியப் பொருள்கள், நேற்று (15) வழங்கப்பட்டன.

இப்பொருட்களை, மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் திருமதி கே.கலாரஞ்சனியிடம் அம்கோர் நிறுவன மாவட்டப் பணிப்பாளர் எம்.முரளீதரன் கையளித்தார்.

குறித்த கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்கு வெளியில் சென்று தமது அத்தியாவசிய சேவைகளை நிறைவு செய்ய முடியாத காரணத்தால், அப்பிரிவிலேயே அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான உபரணங்களும் இங்கு வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .