Editorial / 2020 ஜனவரி 17 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத். எச்.எம்.ஹேவா
தலவாக்கலை- கிரேட்வெஸ்டன் மலைப் பிரதேசத்தைப் பார்வையிடச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று (16) மாலை கிரேட்வெஸ்டன் மலைப் பிரதேசத்துக்குச் சென்ற போதே, குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் இருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 7 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
37 minute ago
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
28 Jan 2026