Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை, கொட்டியாகலை மத்திய பிரிவைச் சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண் தொழிலாளர்களுக்கு உரிய தொழிலை வழங்காது, தொடர்ந்து கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கொட்டியாகலைத் தோட்ட நிர்வாகத்தினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஆண் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிப்பதைத் தவிர்த்து ஏனைய தொழிலை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் முன்வந்தது. எனினும், குறிப்பிட்ட தொழிலாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து இன்று தொழிலுக்கு வரவில்லையென்று தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago