2025 ஜூலை 12, சனிக்கிழமை

வேலைக்காரி என்ற சொல்லை மாற்றுவோம்- மேனகா கந்தசாமி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கண்டி, ஈ.எல். சேனாநாயக்க சிறுவர் நூலகத்தில் இடம் பெற்ற வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த கூட்டம் (17)வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை சட்ட ஆவனங்களிலிருந்து 'வேலைக்காரி' என்ற சொல்லை  அகற்றி  'வீட்டு வேலை தொழிலாளர்' என்ற சொல்லை  உற்புகுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை, இலங்கை தொழிற் சங்கங்களில் ஒன்றான 'இலங்கை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம்' மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் இணைத் தலைவியும் இலங்கை செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளருமான மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அணி திறட்ட முடியாத தொழிலாளர்களாக ஒரு காலத்தில் இருந்த  வீட்டு வேலை தொழிலாளர்கள், இலங்கை செங்கொடிச் சங்கம், செங்கொடி சங்க மாதர்ப்பிரிவு, மற்றும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக அது ஒரு தொழிற் சங்கமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

எமது சங்கம் பதிவு செய்யப்பட்டது மட்டும் போதாது. அதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கு முன் எமக்குறிய கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். நேரத்திற்கு வேலைக்கு செல்லுதல், நாணயம் நம்பிக்கைகளை பேணுதல் போன்ற நற்பன்புகளையும் எமது சேவை நிபந்தனைகளையும் சரியான முறையில் நிறைவேற்றிய பின் எமது உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே இச்சங்கம் நிலைத்து நிற்க முடியும்.

அல்லது மீண்டும் அணி திறட்ட முடியாத ஒரு அமைப்பாகவே மாறிவிடும்.

அடுத்த கூட்டம் நடைபெறும் போது, சட்ட ஆவனங்களில் 'வேலைக்காரி' என்ற சொல்லுக்கு பதில் 'வீட்டு வேலை தொழிலாளி' என்ற பதத்தை உற்படுத்தியவர்களாக இக்கூட்டம் நடை பெற வேண்டும் என எதிர் பார்கிக்கின்றேன்.

வீட்டு வேலை தொழிலாளர்கள் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் தொழிலாளர் என்ற அடிப்படையில் எமக்கும் உரிமைகள் உண்டு.

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அறிவு திறமை, சட்ட ஒழுங்குகள் என்பன முக்கியமாகத்தேவை. அந்த அடிப்படையில் எமது சங்கம் அறிவு, திறன் என்பவற்றை வளர்க்க உதவுவதுடன் சட்டம் தொடர்பான விடயங்களை கையாளவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது என அவர் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னால் பிரதி தொழில் ஆணையாளருமான எஸ்.ஜீ.சூரியாரச்சி இவ்வாரு தெரிவித்தார்,

தெரிழலாளர் நலன் காக்க சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சட்ட ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் சட்டத்தால் பெற முடியாத உரிமைகளை கூட தத்தமது எஜமானர்களின் மனதை கவர்வதன் மூலம் சலுகைகளாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர் பிரச்சினைகளை கையாள்வதற்கு மாவட்ட தொழிலாளர் காரியாலயங்களுக்கு மேலதிகமாக உப காரியாலயங்களும் உள்ளன. இவற்றில் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இலங்கை குற்றவியல் சட்ட கோவையின்படி பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்;வைப்பெற சிறுவர் மற்றம் மகளிர் பிரிவுகள் பொலிஸ் நிலையங்கள் தோரும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமும் தேவையான உதவிகளை பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில்,சங்கத்தின் ஆலோசகர் பீ. நவரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .