2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பகுதியில் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணச் சிறையில் இதுவரையில் 28 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .