Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 08 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் ஐவரையும், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன், நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் இருந்து விசைப்படகுடன் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை, கடற்படையினர் கைது செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதான மீனவர்கள் ஐவரையும் ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதேபோல், தலைமன்னார் கடற்பரப்பில் இரு விசைப்படகுடன் கைதான இந்திய மீனவர்கள் 11 பேரையும், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago