Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மூன்று பிரிவுகளை சேர்ந்த மாற்று ஆற்றலுடையவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
பருத்தித்துறை, சங்காணை, சாவகச்சேரி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மாற்று ஆற்றலுடைய பிள்ளைகள்கள், அவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், அதிக பிள்ளைகளைக் கொண்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் என பிரிவுகள் ரீதியாக இந்த உதவிக்கான தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
தெரிவு செய்யப்பட்டோரில் 40 பேருக்கு சுய தொழில் மேற்கொள்வதற்கென தலா 25 ஆயிரம் ரூபாவும் மாதாந்தம் 50 பேருக்கு உடனடி தேவைகளுக்கென ஆறாயிரம் ரூபா வீதமும் 10 பேருக்கு பழுதடைந்த உபகரணங்களை திருத்தம் செய்வதற்கென நாலாயிரம் ரூபா வீதமும் 13 பேருக்கு மாற்று வழுவுடையோர் வசதிகளை பூர்த்தி செய்யவென தலா 15 ஆயிரம் ரூபாவீதமும் 66 பேருக்கு அவசர போக்குவரத்திற்கு உதவியாக 1இ500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
கிராம சேவையாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளை தெரிவு செய்து அனுப்பிவைக்குமாறு மாகாண சமூக சேவைகள் திணைக்கள யாழ்.மாவட்ட அலுவலகர் அ.ஞானவேல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
59 minute ago
1 hours ago