2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சி கிழக்கில் 81 குடும்பங்கள் மீள்குடியமர்வு

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்திரல் 81 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களை மீள்குடியமர்த்தும் நிகழ்வு நேற்று முன்தினம் குடத்தனை அ.த.க. பாடசாலையில் இடம்பெற்றது.

512 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டிக்கிரி திஸநாயக்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.

சொந்த இடத்தில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட இக் குடும்பங்களுக்கு கூரைத் தகடுகள், விவசாய உபகரணங்கள் போன்றனவும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .