2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவர்’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மாகாணத்துக்குத் தன்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி தான் சிந்திக்கவில்லையெனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ,கே.சிவஞானம், அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவரெனவும் கூறினார்.

ஆனாலும் ஏதேனும் காரணங்களால், அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதனை கட்சி செய்யாதவிடத்து, அதற்கு எதிராக தன்னுடைய செயற்பாடுகளை தான் முன்னெடுப்பேனெனவும் கூறினார்.

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X