2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழில் தொடரும் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

 

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் திறக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (17) 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

எமது உறவினர்கள் காணாமல் போகவில்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், வலிந்து காணமல் ஆக்கிகப்படோரே விசாரணை செய்து கண்டுபிடிப்பது என்பது வெறும் அப்பட்டமான பொய்ப் பிரசாரம், எமது பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேசமே மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து, திங்கட்கிழமை (16) கோரிக்கையினை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .