Suganthini Ratnam / 2016 ஜூலை 08 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவர் ஒருவரைக் கைதுசெய்யச் சென்ற கடற்படையினரின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட அம்மீனவரைப் பிடிக்க முயன்ற பிரதேசவாசி ஒருவர் அம்மீனவரால் கடித்துக் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரோந்துப்படகு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை காலை கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள், சந்தேகத்துக்கிடமான முறையில் வலைகளைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகை அவதானித்துள்ளனர். இதேவேளை, கடற்படையினரின் படகை அவதானித்த அம்மீனவப் படகும் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இவ்வாறு தப்பிச்சென்ற மீன்பிடிப் படகு தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்படை வீரர் கருக்குப்பனை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அதன்போது, தப்பிச்சென்ற படகு கரையினை அடைந்துள்ளதோடு, அதிலிருந்து மீனவரைக் கைதுசெய்ய கடற்படை வீரர் முயன்றுள்ளார். இதன்போது, அம்மீனவர் கடற்படை வீரரைத் தாக்க முற்பட்டுள்ளார். பிரதேச மக்கள் அம்மீனவரைப் பிடித்துக் கொண்டுள்ளனர். எனினும் பிரதேச மக்களின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ள அம்மீனவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் அம்மீனவரைப் பிடிக்க முயன்ற பிரதேசவாசி ஒருவரைக் கடித்து காயமேற்படுத்தியுள்ளார். பின்னர் அம்மீனவர் கடற்படை வீரரினால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025