George / 2016 ஜூலை 12 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை தொடர்ந்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இவர்கள், கடந்த மே மாதம் 30ஆம் திகதி மற்றும் ஜீன் மாதம் 6ஆம் திகதி ஆகிய நாட்களில் தலைமன்னார் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விசாரணைக்காக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago