Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட், என்.ராஜ்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா, நாளை சனிக்கிழமை (7) காலை இடம்பெறவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணிக்கு, கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச்சொரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
நாளை சனிக்கிழமை காலை, திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், தலைமன்னார் கடற்கரையில் இருந்தும் வடக்கே யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இரங்கல் துறையிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், படகுகள் மூலம் கச்சதீவை நோக்கிப் பயணமாகியுள்ளனர்.



8 minute ago
6 hours ago
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
6 hours ago
23 Nov 2025