Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ். என்.நிபோஜன்
கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில், அவர்கள் பணியாற்றுகின்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதப் போவதாக, கரைச்சிப் பிரதேசச் சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
கரைச்சிப் பிரதேசச் சபையின் 7ஆவது அமர்வு, இன்று (10) நடைபெற்றது. இதன்போது, தலைமைத்தாங்கி உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சபை நடவடிக்கைகளை விமர்சித்து, சபையைச் சீராகக் கொண்டுச் செல்வதற்கு இடையூறாக, சில ஊடகவியலாளர்கள் காணப்படுவதாகவும் தவறான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
எனவே, இவர்களின் நிலைப்பாடு தொடர்பில், அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சபை உறுப்பினர்களான இளங்கோ, சர்மிளா, செல்வராணி, லோறன்ஸ் உட்பட பலர், இதுவரை சபை நடவடிக்கைகள் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும், ஊடகங்களில் வெளிவந்த எந்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது அல்லவெனத் தெரிவித்தனர்.
அத்துடன், சபை நடவடிக்கைகள், பல சந்தர்ப்பங்களில், ஒரு கட்சி சார்ந்துக் காணப்பட்டமையை, ஊடகங்கள் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர்கள், ஊடகங்கள் காரணமாகவே, சபை ஓரளவுக்காவது நியாயமான முறையில் நடத்தப்படுவதாகவும் கூறினர்.
54 minute ago
56 minute ago
1 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
1 hours ago
18 Sep 2025