Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கனகபுரம் கோழிப்பண்ணைப் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றிற்குள் கிடந்து கடந்த திங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெருமாள் சிவகுமார் தெரிவித்தார்.
சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது ஆனாலும் மரணத்திற்கான காரணத்தை அறிய சடலம் வவுனியா பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினுடைய மருத்துவ பரிசோனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இறந்தவர் பாலசுப்பிரமணியம் நிமலன் வயது 50 மீளக்குடியமர்ந்து தனிமையில் வசித்துவந்தவர் என நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்தது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026