Super User / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட உயிலங்குளம் பகுதி மக்களின் நலன்கருதி மன்னார் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை காலை உயிழங்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது பொலிஸ் முறைப்பாடுகள் பதிவு செய்தல், முறைப்பாட்டுப் பிரதிகளை பெற்றுக் கொள்ளுதல், பிணக்குகளை தீர்த்து வைத்தல் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள அலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற பல்வேறு சேவைகள்
வழங்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்கு, மன்னார் பொலிஸ் அத்தியட்சக ஜெயவர்தனவும், மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி துஸாத தலுவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026