2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை ஒப்படைப்பவர்களுக்கு மாற்று நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் அதனை ஒப்படைக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் அ.பவாநிதி தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

அத்துடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை ஒப்படைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 3ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X