2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இராணுவ தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே, குறித்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது 

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் வடக்குக்கான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,”ஜநாவே போர்க்குற்றவாளி ஷவேந்திர சில்வாவை கைதுசெய், தமிழர்களின் பாதுகாப்புக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினை உடனடியாக அனுப்பு” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாட்டினது கொடிகளையும்  கையில் ஏந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 944  நாள்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X