2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

S.Renuka   / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து நகைபிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. 

அந்த வகையில், சர்வதேசச் சந்தை நிலைவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இன்று திங்கட்கிழமை (23) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய தங்க விலை நிலைவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X