2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதி போரில் பிறந்த மாணவி கௌரவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார்.

இந்த மாணவிக்கு ஆங்கில கல்வி நிறுவனமொன்றினால் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

24ஆம் திகதியன்று, கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குறித்த மாணவி உட்பட புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .