2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக, உள்ளூராட்சி திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தல்களை, ஒலிபொருக்கி மூலம் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கான அறிவிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதன்போது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வருபவர்கள் தொடர்பான விவரங்களை, அருகில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறியத்தருமாறும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .