Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நகரில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தினால் படுகாயங்களுக்கு உள்ளான ஆசிரியர் வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் கதிரேசு வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி ஆசிரியரை வழிமறித்துள்ள இனந்தெரியாதோர் சிலர் பொல்லுகளால் அவரைத் தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago