Menaka Mookandi / 2016 மார்ச் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1575: முகலாய சக்கரவர்த்தி அக்பர், வங்காள இராணுவத்தை தோற்கடித்தார்.
1857: பிரிட்டனும் பிரான்ஸும் சீனா மீது போர்ப் பிரகடனம் செய்தன.
1918: ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யாவுக்கி டையல் பிரெஸ்ட்- லிடோவ்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1938: சவூதி அரேபியாவில் பெற்றோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939: ஆங்கிலயே எதேச்சதிகாரத்திற்கு எதிராக மும்பையில் மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1943: லண்டனில்வான் வழி தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தேடி கட்டிடமொன்றுக்குள் புகமுயன்றவர்களில் 173 பேர் நெரிசலில் சிக்கி பலி.
1975: துருக்கிய விமானமொன்று பாரிஸ் நகருக்கருகில் வீழ்ந்ததால் 345 பேர் பலி.
1991: சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
1992: பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
2002: ஐ.நா.வில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.
2005: அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட், முதல் தடவையாக தனியாளாக விமானமொன்றில் எங்கும் நிறுத்தாமல் உலகை சுற்றிப் பறந்துமுடித்தார்.
2009: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அறுவரும் பொதுமகன்கள் இருவரும் பலியாகினர்.
2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025