Sudharshini / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை (11) காலை நடைபெற்றது.
22 வருடங்களின் பின்னர் நடைபெறும் கும்பாபிகேஷகத்தை காண்பதுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடியவர்கள் வருகைதந்திருந்தனர்.
ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் வசதிக்கருதி கடற்கரை முன்றலிலிருந்து ஆலயத்துக்கு சொந்தமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மன்றத்தினரால் அடியவர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .