2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இருவேறு இடங்களில் 5 சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                  (ஒலிந்தி ஜயசுந்தர)

இருவேறு இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரியெல்ல, முதுன்கொடுவப் பகுதியில் எரிவடைந்த வீடு ஒன்றிலிருந்து இரு சடலங்களும்
புளத்சிங்கள பகுதியிலிருந்து இனந்தெரியாத 3 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவடைந்த வீட்டிலிருந்து 32 வயதான தாயினதும் அவரது 7 வயதான மகனினதும் சடலங்களே கிரியெல்ல பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புளத்சிங்கள உடஹேவத்த ஹல்வந்துர என்னும் இடத்திலிருந்து இன்னும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பான விசாரணைகளை அந்ததந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .