2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மரை இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதித்து தமுத்தேகம மஜிஸ்திராத் சாமர கெக்கிரிதெனிய தீர்ப்பளித்தார்.

லிந்தவெவ, ரனோராவ வனப் பகுதியில் மேற்படி நபர் கட்டுத் துவக்கை பொருத்தி மரையை வேட்டியாடியுள்ளதுடன் 9 கிலோ கிராம் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலயாபத்துவ மான்கடவள பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .