A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

உங்களிடம் ஒரு கோடி (இந்திய ரூபாய்) இருந்தால் நீங்களும் தமன்னாவினை வைத்து திரைப்படம் எடுக்கலாம். அடடா மழைடா அடைமழைடா… என்ற பாட்டு தமன்னாவுக்கு ரொம்பவே பொருந்துகின்றது. ஏனெனில் அவரது சம்பளம் அந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.
''தயாரிப்பாளர்களின் நிலை அறிந்துதான் நான் சம்பளம் கேட்கிறேன். கதைக்கு தகுந்தபடி தாராளமாகவே நான் நடித்துக் கொடுக்கின்றேன். ஆகையினால் சம்பள விடயத்தில் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது'' என பிடிவாதம் பிடிக்கின்றார் தமன்னா. இதனால் தயாரிப்பாளர்கள், தமன்னாவின் பக்கமே திரும்பிப் பார்க்க பயப்படுகிறார்கள். ஆனாலும் முன்னணி கதாநாயகர்கள் தமன்னாதான் தங்களுக்கு ஜோடியாக வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதால், தயாரிப்பாளர்கள் செய்வதறியாது தமன்னாவுக்கு வாரி வழங்குகிறார்கள்.
ஏனைய நடிகைகள்போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காவிட்டாலும் கைவசம் தரமான படங்களை வைத்திருப்பதால் தமன்னா யாருக்கும் மசிவதாக தெரியவில்லை. பாவம் தயாரிப்பாளர்கள்!
.jpg)

30 Mar 2026
30 Mar 2026
KI Tuesday, 17 August 2010 08:05 PM
என்னிடம் ஒரு ரூபாதான் உள்ளதே !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026